Saturday, 18 June 2016

பயங்கவாதிகளின்_பயங்கரசதித்திட்டம். பிஜேபி_தேசிய_செயற்குழுக்கூட்டம்

#பயங்கவாதிகளின்_பயங்கரசதித்திட்டம்
#பிஜேபி_தேசிய_செயற்குழுக்கூட்டம்

பிஜேபி செல்வாக்கில்லாத 5மாநிலத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

4மாநிலங்களில் படுதோல்வி ஒரு மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய தென்றாலும் 5மாநிலங்களில் பிஜேபியின் வாக்குவங்கி அச்சுறுத்தும் வகையில்கூடியுள்ளது என்பதே உண்மை

அடுத்து வரும் ஓராண்டுக்குள் 5மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது

பஞ்சாப்,குஜராத், இமாச்சல் பிரதேசம், உத்திரப்பிரதேசம்,உத்தர்காண்ட்

இதில் பஞ்சாபில் வாடிக்கையாக கூட்டணி ஆட்சி, மற்ற மாநிலங்களில் பிஜேபி வெற்றி பெறும்.
உத்தரப்பிரதேசத்தைகைப்பற்றுவதுதான் பிஜேபியின் முக்கிய அஜென்டா.

மோடிக்கு தொங்குபாராளுமன்றம் அமையும் நிலையை மாற்றி 73MP சீட்டைக் கொடுத்து உத்தரப்பிரதேசம்.

காரணம், அங்கு குஜராத்துக்குள் நுழையக் கூடாதென விரட்டப்பட்ட அமித்ஷா தலைமையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட முசாபர்நகர் மதக்கலவரம்..

இந்தியாவில் பெரியமாநிலம் 80MP, 400கும் மேற்பட்ட MLA தொகுதிகள். இதைக் கைப்பற்றினால் ஒரு 15வருடத்துக்கு இந்தியாவை நிரந்தரமாக பிஜேபி ஆளலாம். பிராந்திய கட்சிகளை ஒழித்துக்கட்டலாம். ராஜ்யசபாவுக்கு தேவைப்படும் MPகள் கிடைக்கும்.

இதற்கு என்ன செய்ய வேண்டும்?
சமாஜ்வாதி,பகுஜன் சமாஜ்வாதி, ஜனதா தள செல்வாக்கு உள்ள உத்திரப் பிரதேசத்தில் தலித்துகள், முஸ்லீம்கள் வாக்குவங்கிதான் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்றன.

எனவே பிஜேபி கால்பதிக்க வேண்டுமென்றால் மீண்டுமொரு முசாபர்நகர் கலவரத்தைத் தொடங்க வேண்டும். தலித்துகளை கையில்  வளைத்தெடுக்க வேண்டும்.

கலவரம் முசாபர்நகரில்தான் நடத்த வேண்டுமென்பதில்லை. அங்கிருந்து 70கிமீ அப்பாலிருக்கும் கைரானா நகரை மையப்படுத்திக்கூட நடத்தப்படலாம்.

"முஸ்லீம் 85% உள்ள கைரானாவில் அவர்களின் அச்சுறுத்தல் காரணமாக 346 இந்துக்குடும்பங்கள் ஊரைவிட்டு சென்று விட்டனர்.இந்துக்கள் அங்கு வியாபாரம்  செய்ய,நிலம்வாங்க, வாழ முடியாத பயங்கரசூழல் நிலவுகிறது" 

இந்தப் பிரச்சனைதான் பிஜேபியின் முக்கியப் பிரச்சனை. இந்தப் பகுதிக்கு பிஜேபி ஒரு குழுவை அனுப்பி வைக்குமென பிஜேபி செயற்குழு அறிவித்துள்ளது.

அதாவது, தேர்தலை முன்னிட்டு கலவரத்துக்கு அச்சாரம் போடப்பட்டு விட்டது. இதற்கானத் தொடக்க விழாவை அமித்ஷா தலித் வீட்டில் உணவருந்தி தொடங்கி வைத்தார்.

கனன்று கொண்டிருக்கும் முசாபர்நகரில் மீண்டும் கலவரத்தைத் தொடங்க சதி வேலைகள் தொடங்கப் பட்டுவிட்டன 1மாதம் முன்பு 2கொலைகள் நடந்தன.
அதைவைத்து பிஜேபி பிரச்சனையைக் கிளப்பிப் பார்த்தது.  ஏனோ அது பற்றி எரியவில்லை.

கலவரத்தின் மையம் கைரானாவா? முசாபர்நகரா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

தலித் ஓட்டுவங்கியைக் கவர உபியில் எல்லா பிஜேபி தலைவர்களும் தலித் வீடுகளில் உணவருந்தும்படி உத்தரவிட்டுள்ளார்.

(கலவரம் செய்வது, கலவரத்தில் முஸ்லீமை எரித்துக் கொள்வதைவிட 'கஷ்டமான' காரியமாச்சே ..பல்லைக் கடித்துக் கொண்டு எப்படி தலித் வீடுகளுக்கு போவார்கள் என்பதை விரைவில் பார்க்கலாம்.

அல்லது அமித்ஷா போல 5ஸ்டார் விடுதியிலிருந்து உணவை வரவழைத்து தலித் வீட்டில் உண்ணக்கூடும்.)

இதெல்லாம் காந்தி,லாலு,MGR, ராகுல், வகையறாக்கள் காலம்காலமாக நடத்தும் எளிமை,கவர்ச்சிவாத நாடகங்கள்தான்.

சிங்,ஜாட்,தாக்கூர்,யாதவ ஜாதியினர் மத்தியில் 'இந்து வாக்குவங்கி'யை உருவாக்குவதில் வெற்றி பெற்றுவிட்டனர். அந்த இந்து வாக்கு வங்கிக்குள் தலித்துகளை இழுத்துப் போடும் வேலையைத்தான் நாடெங்கும்
பிஜேபி செய்து வருகிறது.

தலித்தலைவர்களை விலைபேசுவது,
அம்பேத்காருக்கு காவிச் சாயம் பூசுவது
அவர்களை RSSகலவரத்துக்கு அடியாளாக்குவது,பிள்ளையார் ஊர்வலத்தில் ஆடுவதற்கென 'தயார்' படுத்திதான் வைத்துள்ளார்கள்.

அமித்ஷா+பள்ளர்கள் கூட்டுக்கட்டு ஓர் உதாரணம். அவர்களில் ஒரு பிரிவை வைத்து இடஒதுக்கீட்டுக்கெதிராக பேசவைத்ததையும் நினைவிற் கொள்க.

மணிப்பூர்,காஷ்மீர் தனிநாடு கோரிக்கையை முறியடிக்க ராணுவமயம்,ராணுவ குடியேற்றம்.

பஞ்சாப் தனிநாடு கோரிக்கையை முறியடிக்க அவர்களை போதையில் நாதமாக்கியது.

தமிழ்நாட்டை அடிமையாக்கி வைக்க 40ஆண்டுகளாக தீவிரமாக நடந்து வரும் பார்ப்பன மயமாக்கம், பார்ப்பன மீட்சி.

தற்போது ஜாதி,மதவாத சக்திகளை திட்டமிட்டு வளர்ப்பது அதை முன்னெடுத்துச் செல்ல தோற்ற  ஜெயலலிதாவை ஜெயிக்க வைத்தது என தொடர்கிறது,

RSS+மோடி தலைமையில் நடைமுறைத்தப்பட்டு வருகிறது சட்டப்பூர்வ பாசிசம் அல்லது அறிவிக்கப்படாத பாசிசக் காட்டாட்சி.
அறிவிக்கப்படாத இந்து ராஷ்டிரம்
அறிவிக்கப்படாத மிசா

இந்த 5மாநிலத் தேர்தலில் பிஜேபிதான் பெரும்பான்மை பெறும் அல்லது ஜெயாவை ஜெயிக்க வைத்தது போல தேர்தலில் ஜெயிப்பார்கள்.

பிஜேபி வெற்றி உறுதியில்லாத உத்தரப்பிரதேசம் மட்டும்தான் அவர்களுக்கு முழு இலக்கு.

இனி, அமைதியை இழக்கப் போகிறது
உத்தரப் பிரதேசம்.
ஜாதி,மதக் கலவரங்கள் திட்டமிட்டுத் தூண்டிவிட இப்போதே குழுக்களை நியமித்து விட்டார்கள். தலைமை அமித்ஷாதான்.

எதிர்த்து நிற்க வலுவான சக்தியில்லாமல் பார்ப்பனீயம் கொட்டமடித்துக் கொண்டிருக்கிறது.

அவர்களது தீவிரஇந்துத்வாவை எதிர்கொள்ள முடியாமல் திணறுகின்றன
மிதவாத இந்துத்வா கட்சிகளான காங்கிரஸ்,கெஜ்ரிவால், மம்தா, முலாயம், லாலு,நிதிஷ்,தேவகௌடா,மாயாவதி போன்ற பிரதேச கட்சிகள்,

இந்துத்தீவிரவாதத்தை முறியடிக்க மதசார்பற்ற சக்திகளோடு சேராமல் தீய பக்கம் சரியும் முஸ்லீம்கள்.

தன் சித்தாந்தம்
மக்களை ஏன் சென்றடையமுடியவில்லை என ஆராயாமல் துண்டுதுண்டாக சிதறி உடைந்து கொண்டே இருக்கும் புரட்சிகர கம்யூனிஸ்ட்டுகள்.

மக்களை ஜாதியாக,மதமாக,இனமாக பிரித்து அடிமையாக்க ஏகாதிபத்தியமும் இந்துத்துவமும் கோடிகளை செலவாக்கி வருகிறது.

இப்படியாக RSS&மோடி கும்பல் எதிர்க்க யாருமில்லாமல் களத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

மிகப்பெரிய அழிவைச் சந்திக்க நாடு தயாராகிக் கொண்டிருக்கிறது.

கையறு நிலையில் கம்யூனிஸ்ட்டுகளும், பட்டாளி வர்க்கமும்

(பிஜேபி செயற்குழு பற்றிய பதிவு தொடரும்)

நன்றி : சகோ Manickam Palaniyapan அவர்களின் சிறப்பு மிக்க எச்சரிக்கை பதிவு!

No comments:

Post a Comment