தமிழகத்தில் தவ்ஹீத் பிரச்சாரம் தொடங்கப்பட்டு 30 ஆண்டுகால வரலாற்றில் மௌலவி பீஜே அவர்கள் மிக கடுமையான விமர்சனங்களுக்கும், தாக்குதல்களுக்கும் உள்ளானதைப்போல் கடந்த 10 ஆண்டுகளாக செய்யது இப்ராஹீம் அவர்கள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார்கள்.
அதற்கு அடிப்படை காரணம் என்னவென்றால்...
தினம் ஒரு தகவல் மூலமாக மார்க்க பிரச்சாரம் மட்டுமின்றி சமூக ரீதியிலான பொய் பிரச்சாரங்களுக்கு தகுந்த பதிலடியை தமக்கே உரிய பாணியில் நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் பதில் கொடுப்பதால் குலைநடுங்கும் எதிரிகளால் சமூக வலைதளங்களில் போலி கணக்குகளில் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.
உதாரணத்திற்கு சொல்லவேண்டுமென்றால் மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவி பள்ளியில் மார்க்கத்திற்கு முரணான வகையில் கட்டப்பட்ட பச்சை டூமை அகற்ற வேண்டும் என்று கூறினார்.
செய்யது இப்ராஹீம் மதீனாவையே இடிக்க சொன்னதுபோல் முகநூலில் தவ்ஹீத் ஜமாஅத்தின் எதிரிகளால் பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு சுயநலவாதிகளால் போராட்டம் நடத்தப்பட்டு செய்யது இப்ராஹீம் நாக்கை வெட்டுவோம், கையை வெட்டுவோம், கழுத்தை வெட்டுவோம் என்று குரைத்தனர்.
அப்போராட்டமே வரலாற்றில் முத்திரை பதித்த ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடத்த அடிப்படை காரணமாக அமைந்தது.
இப்படி செய்யது இப்ராஹீம் எதை பேசினாலும் அதை சர்ச்சைக்குரியதாக ஆக்கிவிட்டு செய்யது இப்ராஹீமுக்காக லட்சக்கணக்கான தவ்ஹீத்வாதிகள் ஆதரவுக்கரம் நீட்டி ஷிர்க் ஒழிப்பு மாநாட்டின் புயல் ஓய்ந்துள்ள சூழலில்....
செய்யது இப்ராஹீமுக்கு எதிராக அடுத்த புயலை உருவாக்க முயன்று வருகின்றனர் முகநூல் கீபோர்ட் புலிகள்.
அப்படி என்ன சொன்னார் செய்யது இப்ராஹீம் ?
செய்யது இப்ராஹீம் பிர்அவ்ன் சம்பந்தமாக சொல்லும்போது எகிப்தில் பாதுகாக்கப்பட்டு வரும் உடல் பிர்அவ்னின் உடல் அல்ல என்று கூறினார்.
இந்த வார்த்தையை சொன்னதற்கு அவர் குர்ஆனையே பொய் என்று சொல்வதுபோல் அவதூறுகளை பரப்ப தொடங்கி விட்டனர்.
எகிப்தில் இந்த உடலை மட்டும் பாதுகாக்கவில்லை, எண்ணற்ற உடல்களை பாதுகாத்து வருகின்றனர், இது எகிப்தியர்களின் பண்டையகால வரலாற்று நடைமுறையாகும்.
இவ்வாறு பல்வேறு உடல்கள் பாதுகாக்கப்படுவதால் ஆளாளுக்கு இதுதான் பிர்அவ்ன், அதுதான் பிர்அவ்ன் என்று பரப்ப முடியும்,
குர்ஆனில் பிர்அவ்ன் சம்பந்தமாக அல்லாஹ் கூறுவதை சரியாக விளங்கினால் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன்னை உன் உடலுடன் இன்று பாதுகாப்போம். (என்று கூறினோம்) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்.
(திருக்குர்ஆன் 10:92)
இந்த குர்ஆன் வசனத்தில் உன்னை உன் உடலுடன் இன்று பாதுகாப்போம் என்ற சொல்லுக்கு...
இறந்து போன உடலை பாதுகாப்போம் என்று அர்த்தமல்ல, அனைவரும் கடலில் மூழ்கடிக்கப்பட்டனர். உன்னை உயிருடன் கடலிலிருந்து மீட்போம் என்ற பொருளே அடங்கியுள்ளது.
அந்த வகையில் அன்றைய தினம் அனைவரும் கடலில் மூழ்கடிக்கப்பட்டவுடன் பிர்அவ்னை மட்டும் அல்லாஹ் காப்பாற்றி உயிருடன் கரை ஒதுக்கி தன்னை கடவுள் என்று கூறிய பிர்அவ்னை நிர்கதியாக நிற்க விட்டு நீ கடவுள் இல்லை, நீ சாதாரண மனிதன் என்பதை பிர்அவ்னுக்கு உணர்த்தும் விதமாகவும், அன்றைய மக்களுக்கு சான்றாகவும் ஆக்கியுள்ளதை புரிந்து கொள்ள முடிகிறது.
இதை தான் செய்யது இப்ராஹீம் கூறினார்.
பிர்அவ்ன் சம்பந்தமாக மௌலவி பீஜே அவர்கள் கொடுத்துள்ள முழுமையான விளக்கத்தினை கமெண்ட் பகுதியில் இணைக்கிறோம் பாருங்கள்...
செய்யது இப்ராஹீம் சொன்னது சம்பந்தமாக தெளிவாக புரிந்து கொள்ள முயலாமல் ஏதோ அவரை இழிவுப்படுத்த வாய்ப்பு கிடைத்ததுபோல் முகநூல் கீ போர்ட் புலிகள் தயாராகியுள்ளனர்.
30 ஆண்டுகால வரலாற்றில் ஆயிரக்கணக்கான அவதூறுகளால் அசைக்க முடியாத ஏகத்துவ ஆல விருட்சத்தை போலி முகநூல் கீ போர்ட் புலிகள் அசைத்து விட போகிறார்களா ? ஓர் இறைக்கொள்கை இன்னும் சுடர் விட்டு எரிய வாய்ப்பாகவே அமையும்.
ஷிர்க் ஒழிப்பு மாநாடு என்ற ஏகத்துவ புயல் தமிழகத்தை 6 மாதத்திற்கு மையம் கொண்டது போல் அடுத்த புயல் புறப்படுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.