Sunday, 26 June 2016

தொழுகை_அல்லாஹ்_அருளிய_அழகிய_யோகா

#

முஸ்லிம்கள் ஒரு நாளைக்கு ஐந்து தடவை என இறைவனை துதிக்கும் தொழுகை முறையே ஒரு அழகிய யோகா....

தன்னிலை மறக்கும் தியானமும்... தெம்பூட்டும் மூச்சுப் பயிற்சியும்... திடன் வளர்க்கும் ஆசனங்களும்... தன்னுள்ளடக்கியது தான் யோகா?

‘வணக்கத்தை அல்லாஹ்வுக்கே உரித்தானவர்களாக அவனையே வணங்க வேண்டும் என்றே அவர்கள் ஏவப்பட்டுள்ளார்கள்’ . (அல்-குர்ஆன் 98:5)

இறைமறையின் வசனங்களை... இறைத்தூதர் கற்றுத் தந்த படி... முழுமையான தஜ்வீதுடன்... இனிமையாய் ஓதும் போது... மூச்சுப் பயிற்சிக் கிடைக்கிறது.

நின்று... குனிந்து... நின்று... மண்டியிட்டு...இருந்து...மண்டியிட்டு எழுந்து நிற்கும் போது... ரகாஅத் ஒன்று ஆகிறது, நாளொன்றுக்கு ஐந்து நேரம், பதினேழு தடவைச் செய்ய, நல்ல உடற்பயிற்ச்சியும் தான் கிடைக்கிறது.பின்னர், உமக்கும் எமக்குமான வித்தியாசமே... இந்த தொழுகை தான்.

உமது யோகாவோ... உலகம் துறந்த சித்தர்களுக்கானது. எமது தொழுகையோ... உலகைச் சார்ந்து வாழும் மனிதர்களுக்கானது...ஆனால் யோகாவை விட தொழுகையே சிறந்தது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

யோகா ஏன் மெதுவாகவும், பொருமையாகவும் செய்ய வேண்டும் ? இது போன்று தானே நம் தொழுகையையும் நம் உலக லாபங்களுக்காக அவசர அவசரமாக முடிக்கிறோம் ?

திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்? என நபித்தோழர்கள் கேட்டனர். தனது ருகூவையும், சுஜூதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அபூகதாதா (ரலி)நூல்: அஹ்மத் 11106

தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்கு கேடுதான்.(அல்குர்ஆன் :107-4)

தொழுகை முறையை தொடர்ந்து ஒருவர் மன ஓர்மையுடன் தொழுது வந்தால் அவருக்கு யோகா பயிற்சியே தேவையில்லை.

முஸ்லிம்கள் தொழுகை முறை சிறந்த யோகா இதனை இறைவனுக்காக முழுமையாகவும் , நேர்த்தியாகவும் கடைப்பிடிக்கும் போது மிகச்சிறந்த யோகா கலையாகவும் பயனளிக்கும்.யோகா கலையின் அனைத்து அம்சங்களும் தொழுகையில் அமைந்திருக்கிறது.

1.நம் தொழுகைக்காக #தக்பீர் கட்டி நிற்பதும் , #ருகூ செய்வதும் மாற்று மதத்தவர்களால் சூரிய நமஸ்காரம் என்று சொல்லப்படும் ஆசனத்தின் ஒரு பகுதியாகும் .

சூரிய நமஸ்காரத்தில் மொத்தம் 10 நிலைகள் உள்ளன.

தொழுகைக்காக நாம் முதலில் அல்லாஹ் அக்பர் என தக்பீர் கட்டவதும் கூட மன ஒர் நிலைப்பாட்டை அடைய அதுவும் ஒரு யோகாதான்

#நன்மைகள்  ● நரம்புகள் வலிமை பெறுகின்றன.
● இரத்த ஓட்டம் சீராக நடைபெறும்.
●தசை நார்கள் உறுதி பெறும்.
.
2. சாசங்காசனம்
● வயிறு நோய்கள் , நரம்புகள் பலம் பெறும் , ஆண்மை அதிகரிக்கும்.
.
3. வஜ்ராசனம்
● அதிக இரத்த அழுத்தம் , இடுப்பு வாயு பிடிப்பு , குடல் கோளாறு நீங்கும்.
.
4. சுஹாசனம்  --> இது நம் தொழுகை முடித்த பின் அமர்ந்து துவா செய்யும் முறையாகும்.
● அதிக நேரம் அமர்ந்திருப்பதால் உடலில் சக்தி சமமாக பரவும்.
.
சிந்தியுங்கள் செயல்படுங்கள்
திருக்குர்ஆனில் அறிவியல்
மறுமை நாளை நோக்கி....

நன்றி திருக்குர்ஆனில் அறிவியல் சான்றுகள்...

No comments:

Post a Comment